<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

அகில இந்திய அறைகூவலுக்கு இணங்க பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட சங்கங்கள் சார்பில் பிஎஸ்என்எல் புதுச்சேரி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.



புதுச்சேரி,ஆக.26

 பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களின் ஊதியத்தை டி.ஓ.டி யின் குறைந்தபட்ச ஊதியம் என்பதற்குப் பதிலாக  பிஎஸ்என்எல் லின் குறைந்தபட்ச ஊதியமாக மாற்ற வேண்டும். ஈபிஎப்,ஈஎஸ்ஐ மற்றும் போனஸ் உள்ளிட்ட சமுக பாதுகாப்பு திட்டங்களை உறுதிபடுத்த வேண்டும்.நிர்வாகத்தின் சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும்.ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தர்ணா போராட்டம் நடைபெற்றது

புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சங்கரன்,ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.முருகையன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிஐடியூ பிரதேச செயலாளர் நிலவழகன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.தமிழ்நாடு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்லடியான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.மாவட்ட சங்க நிர்வாகிகள் கொளஞ்சியப்பன்,சுப்பரமணியன்,மகாலிங்கங்ம்,உஷா உள்ளிட்ட திரளான பிஎஸ்என்எல் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக