<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

ஞாயிறு, 25 மார்ச், 2018

துணை டவர் நிறுவனம் அமைப்பதை அனுமதியோம் ஊழியர்கள் மற்றும அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி 01.04.2018 முதல் துணை டவர் நிறுவனத்தை செயல்படுத்த தொலை தொடர்பு துறையும் அரசாங்கமும் வேகமாக செயல்பட்டு வருகின்றது. BSNLன் வளர்ச்சியை இந்த துணை டவர் நிறுவனம் நிறுத்திவிடும் என்ற காரணத்திற்காகவே நாம் இந்த துணை டவர் நிறுவனம் அமைக்கப்படுவதை எதிர்த்து வருகின்றோம். BSNLஐ பலவீனப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியுற்றதால் அரசு இறுதி முயற்சியாக BSNLன் 70,000 டவர்களை அதனிடம் இருந்து பறித்து முடமாக்க பார்க்கிறது. BSNLன் உயிர் மூச்சு அதன் டவர்கள்தான். அந்த டவர்கள் BSNLஇடம் இருந்து பறிக்கப்பட்டது என்று சொன்னால் அது வெறும் எலும்புக்கூடாக மாறிவிடும். துணை டவர் நிறுவனத்தின் CMDஆக ஒரு IAS அதிகாரியை தொலை தொடர்பு துறை நியமித்துள்ளது. எனவே கண்டிப்பாக இது BSNL இயக்குனர் குழுவின் கீழ் செயல்படாது. இது அரசாங்கம் நடத்தும் ஒரு பகல் கொள்ளை. எனவே BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்காக இந்த துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுத்து நிறுத்திட 27.03.2018 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும் என ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அறை கூவல் விடுத்துள்ளன. எனவே நமது மாவட்ட சங்கங்கள் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென மத்திய மாநில சங்கங்கள் சார்பாக மாவட்ட சங்கங்களை கேட்டுக் கொள்கிறோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக