<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வியாழன், 24 மே, 2018

இயக்குனர் குழு 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் கூடுகிறது துணை டவர் நிறுவனம் அமைப்பதை தடுக்க 28.05.2018 அன்று வெளிநடப்பு போராட்டம் இதுவரை புது டெல்லியில் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்று வந்த BSNL இயக்குனர் குழு 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. எப்போதும் டெல்லியில் நடைபெறும் இயக்குனர் குழு கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற வேண்டிய அவசியம் என்ன? தொலை தொடர்பு துறையின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு துணை டவர் நிறுவனம் செயலாக்காத்தை அமலாக்கவே இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் அமைதியாக இந்தக் கூட்டம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஹைதராபாத்தில் நடத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 23.05.2018 அன்று மதியம் இரண்டு மணிக்கு புது டெல்லியில் NFTE சங்க அலுவலகத்தில் AUABயின் அவசர கூட்டம் நடைபெற்றது. AIBSNLEA பொது செயலாளர் தோழர் பிரகலாத்ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:- 1. துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக 28.05.2018 அன்று ஹைதராபாத்தில் பெருந்திரள் ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது. AUABயின் அனைத்து சங்கங்களின் பொது செயலாளர்களும் ஹைதராபாத் நேரடியாக சென்று அந்த இயக்கங்களுக்கு தலைமையேற்பது. 2. 28.05.2018 அன்று நாடுமுழுவதும் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் அலுவலகத்தில் இருந்து வெளி நடப்பு செய்து துணை டவர் நிறுவனத்திற்கு எதிராக பேரணிகளை நடத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திட வேண்டும். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்கிட மாவட்ட மாநில சங்கங்கள் உடனடியாக அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும் என மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக