<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

JE இலாகா தேர்வில் மதிப்பெண்களில் தளர்வு- BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

28.01.2018 அன்று நடைபெற்ற JE LICE தேர்வில் கேள்வித்தாள்கள் மிக கடுமையாக இருந்தது. மொத்தமுள்ள 9185 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற அந்த தேர்வில் 1800 தோழர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். கேள்வித் தாள்கள் கடினமாக இருந்த காரணத்தால் அதிலும் வெறும் 111 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றனர். எனவே நமது BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து நிர்வாகத்திடம் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற DR TTA தேர்விற்கு வழங்கியது போன்றதொரு தளர்வை இந்த தேர்வை எழுதிய தோழர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தெளிவானதொரு கோரிக்கையை முன்வைத்தது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற DR JTO தேர்விற்கு ஒவ்வொரு பகுதிக்கும் 10%மும், மொத்த மதிப்பெண்களில் 10%ம் தளர்வை கொடுத்து 01.06.2009ல் கார்ப்பரேட் அலுவலகத்தில் உத்தரவு வெளியிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற DR TTA தேர்விற்கு இது போன்ற ஒரு தளர்வை கொடுக்க முடியும் என்றால் அதே போன்ற தளர்வை 28.01.2018 அன்று நடைபெற்ற JE LICE தேர்விற்கும் வழங்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை. தொடர்ச்சியாக நமது கோரிக்கையினை நிர்வாகம் மறுத்த போதும், நமது சங்கம் அந்த கோரிக்கையை கைவிட தயாராக இல்லை. நமது தொடர் வற்புறுத்தலின் ஒரு பகுதியாக 10.07.2018 அன்று CMD BSNLஇடம் நமது பொது செயலாளர் உள்ளிட்ட மத்திய சங்க நிர்வாகிகள் விவாதிக்கும் போது நமது தொடர் கோரிக்கையின் நியாயத்தை எடுத்து உரைத்தனர். அதனை கேட்ட CMD BSNL தேவையானவற்றை செய்வதாக தெரிவித்திருந்தார். மீண்டும் நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு மனித வள இயக்குனரிடமும், GM(Rectt)இடமும் 27.08.2018 அன்றும் விவாதிக்கப்பட்டது. இறுதியாக நமது கோரிக்கையினை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வெற்றி பெற உள்ள அனைத்து தோழர்களுக்கும், நமது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாக்கிக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக