<================> BSNLEU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 21 டிசம்பர், 2018

Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!

Mysuru All India Conference takes historic decision to strengthen working class unity!



The Mysuru All India Conference has taken a historic decision to strengthen working class unity. This is the time when greater unity has to be built to settle the wage revision, pension revision and to safeguard BSNL from the attacks of the government. Revival of BSNL is our historic task. Without unity, we cannot achieve all these. This is not the time to quarrel among us on petty issues. This is not the time to test who is bigger and who is smaller. Particularly, the unity of the two recognised unions- BSNLEU and NFTE- is the need of the hour. The Mysuru All India Conference deeply deliberated this. Finally, the Conference decided to get the Recognition Rule modified, to strengthen unity. As per the Non- Executives’ Recognition Rules, if the first union gets 50% votes or more, than the second union will not get recognition. The Mysuru All India Conference has unanimously passed a resolution, demanding that this clause should be removed. We are hopeful that this will pave the way for closer coordination and understanding between the BSNLEU and NFTE- the two major trade unions of BSNL

2018, டிசம்பர் 26 முதல் 29 வரை AUAB சங்கங்களின் இணைந்த பொதுக்குழுக் கூட்டங்களை நடத்திடுக…






வியாழன், 6 டிசம்பர், 2018

சீர்குலைவு வாதி மதிவாணனின் திட்டம் செல்லாது… நமது ஒற்றுமையையும் சாதனைகளையும் பாதுகாப்போம்.. ஊதிய மாற்றத்தை நோக்கி முன்னேறுவோம்…



DISRUPTOR MADIVANAN- WILL NOT SUCCEED… WE SHALL CONSOLIDATE OUR UNITY AND ACHIEVEMENTS AND MARCH AHEAD FOR WAGE REVISION REPLY TO DISTRUPTOR MADIVANAN, CS NFTE CHENNAI


ஏன் இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.



AUAB கூட்ட முடிவுகளின் தமிழாக்கம் மத்திய அமைச்சருடன் AUAB தலைவர்கள் சந்தித்து விட்டு வந்தபின் நடைபெற்ற AUAB கூட்டத்தின் முடிவுகளின் தமிழாக்கம் இணைக்கப்பட்டுள்ளது.


காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!! AUAB தலைவர்களுக்கும் தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது . BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் , BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது ஊதியமாற்றம் பிரச்சனையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.இதன் நிலை தொடர்பான தொலை தொடர்பு செயலாளரின் பதிலை AUAB தலைவர்கள் ஏற்கவில்லை . இந்த சூழ்நிலையில் மத்திய தொலைதொடர்பு அமைச்சருடன் விவாதிப்பதிற்கான வாய்ப்பை உறுதி செய்வதற்காக, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பது என AUAB முடிவு செய்துள்ளது. மத்திய தொலைதொடர்பு அமைச்சரோடு நடைபெறும் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் 10-12-2018 அன்று 00 .00 மணி முதல் நமது காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்கும் பி.அபிமன்யூ, பொதுச்செயலர்


நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் அன்பார்ந்த தோழரே, 30.11.2018 அன்று CMDஉடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் தரவேண்டும் என்கிற பிரச்சனயை AUAB தலைவர்கள் கடுமையாக விவாதித்தனர். மீதமுள்ள 7%ஐ ஓய்வூதிய நிதியில் BSNL கால தாமதமின்றி செலுத்த வேண்டும் என வலுவாக கோரினர். இறுதியில் மற்றுமொரு 3%ஐ 2019, மார்ச் மாதத்திலும், மீதமுள்ள 4%ஐ அடுத்த தவணையிலும் செலுத்துவதாக BSNL CMD ஏற்றுக் கொண்டார். Saturda


சனி, 1 டிசம்பர், 2018

அன்புள்ள தோழரே, 30.11.2018 அன்று AUAB தலைவர்களுக்கும் BSNL நிர்வாகத்திற்கும் இடையே இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. காலையில் BSNL CMD மற்றும் Director(HR) ஆகியோருடனும் மாலையில் Director (HR) உடனும் நடைபெற்றன. காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்பாக BSNL நிர்வாகத்திற்கும், தொலை தொடர்பு துறை செயலாளருக்கும் இடையே தொடர்ச்சியான கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. 28.11.2018 அன்று மத்திய அமைச்சரும் BSNL CMD அவர்களை சந்தித்துள்ளார். மத்திய அமைச்சர் BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படும், ஓய்வூதிய மாற்றம் செய்யப்படும், BSNL ஓய்வூதிய பங்களிப்பு செய்வதில் அரசு விதிகள் அமலாக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு காலவரையறை நிர்ணயிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் ஊதிய மாற்றம் செய்ய முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் எந்த ஒரு பிரச்சனையிலும் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை. வெறும் உறுதிமொழிகள் மட்டுமே. மத்திய அமைச்சர் AUABயை அழைத்து விவாதிக்க வேண்டும் என மத்திய அமைச்சரை BSNL CMD கேட்டுக் கொண்டார். மேலும் ஊதிய மாற்ற பிரச்சனைய கையாள BSNL நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஊதியமாற்றத்தை தங்களின் பட்ஜெட்டிற்குள் தீர்வு காண்பதாக தெரிவித்தார். ஆனால் அதற்கு அமைச்சர் எதையும் கூறவில்லை. BSNLல் எந்த ஒரு வேலை நிறுத்தமும் நடைபெறக்கூடாது என்றும் கூறியுள்ளார். நாளை(ஞாயிற்றுக் கிழமை) நன்ப்கல் 12 மணிக்கு AUAB தலைவர்களை BSNL CMD பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அமைச்சர் டெல்லியில் இல்லை. எனவே வேலை நிறுத்ததை தொடர AUAB முடிவெடுத்துள்ளது. இந்த விவரங்களை ஊழியர்களிடம் தெரிவிப்பதுடன் வேலை நிறுத்த தயாரிப்புகளை வேகப்படுத்துமாறு மத்திய சங்கம் கேட்டு கொண்டுள்ளது.


ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL (AUAB), BSNL, Puducherry 605001. பத்திரிக்கைச் செய்தி புதுச்சேரி 02.12.2018 பெறுதல் : ஆசிரியர் செய்திப்பிரிவு, நாளிதழ் / தொலைக்காட்சி, புதுச்சேரி. அன்புடையீர், வணக்கம். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் ஒன்றிணைந்து வருகிற 03.12.2018 திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் : (1) 4-ஜி அலைக்கற்றை சேவையினை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குவதற்கு அனுமதி கொடு; (2) மூன்றாவது ஊதிய உயர்வினை 15 சதம் இணைத்து வழங்கு. (3) அனைத்து பி.எஸ்.என்.எல் பென்ஷன்தார்களுக்கும் 01.01.2017 முதல் பென்ஷனை மாற்றியமை ; (4) பி.எஸ்.என்.எல் வழங்க வேண்டிய பென்ஷன் பங்கை அரசின் விதிப்படி செலுத்து ; (5) 2-வது ஊதியக் குழுவில் விடுபட்டுப் போயுள்ள பிரச்சினைகளை தீர்த்து வை ; மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி 30.10.2018 அன்று தர்ணா போராட்டமும், அதனைத் தொடர்ந்து 14.11.2018 அன்று இந்தியா முழுவதும் ஊழியர்களின் பேரணியும் நடைபெற்றது. ஆனால் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் மேலே கண்ட கோரிக்கைகைளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது அதிலிருந்து பின்வாங்குகிறது. எனவே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் வருகிற 03.12.2018 திங்கட்கிழமை முதல் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இச்செய்தியினை தங்கள் நாளிதழில் வெளியிடுவதோடு 03.12.2018 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தொலைபேசி நிலையம் முன் நடைபெறும் ஆர்ப்ப்பாட்டச் செய்தியினையும் தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் பிரசுரிக்குமாறு / ஒலி / ஒளிபரப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். (எம்.செல்வரங்கம்) (ஏ.சுப்ரமணியன்) தலைவர். கன்வீனர்.